சந்தா பணமும், சங்கடமும்...

பையில் காசில்லை என்றாலும், பார்வையில் நம்பிக்கையை நிரப்பியிருக்கும் ஏராளமான இளைஞர்களை கொண்டது கோடம்பாக்கம் ஏரியா. இங்கே நடிக்கிற ஆசையோடு சுற்றுகிறவர்களை விட, இயக்குனர் கனவோடு நடமாடுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இவர்களின் கனவு பலூனில், காற்று போக வைத்திருக்கிறது இயக்குனர்கள் சங்கத்தின் அறிக்கை.
டிசம்பர் இறுதிக்குள் சங்கத்தில் உறுப்பினர் கார்டு எடுக்காதவர்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவதில்லை என்பதுதான் அந்த அறிக்கை. ஒரு படத்தை இயக்கிய இயக்குனர்களில் பலரே, அன்றாட சாப்பாட்டுக்கு திண்டாடுகிற நிலைதான் கோலிவுட்டில். இதில் ரூ.5000 கொடுத்து உதவி இயக்குனர் கார்டுக்கு விண்ணப்பிப்பது என்பது கனவிலும் நடக்காத விஷயம்.
தயாரிப்பு நிறுவனங்கள் உதவி இயக்குனர்களுக்கு வைக்கும் சம்பள பாக்கியை வசூல் செய்து தருவதுதான் எங்கள் நோக்கம். அதனால்தான் ‘அடையாள அட்டை கெடுபிடி’ என்கிறது சங்கம். ஐசியூ வில் இருக்கிற உதவி இயக்குனர்களுக்கு முதலில் ஆக்சிஜன் கொடுங்கள். அப்புறம் கொடுக்கலாம் பிரியாணி பொட்டலத்தை!
|