விஜய்யை வைத்து 'துப்பாக்கி' படத்தை இயக்கிக் கொண்டிருந்தாலும், மனசெல்லாம் அஜீத்தின் பக்கமே இருக்கிறது ஏ.ஆர்.முருகதாசுக்கு. 'அதெப்படி?' என்கிறவர்களுக்கு ஆதாரமாக நாம் சொல்லப் போகும் தகவல் இதுதான்.
தனது தம்பியை வெகு காலமாக ஹீரோவாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முருகதாஸ். ஒருவழியாக அதற்கான நேரமும் வந்துவிட்டது. இப்படத்திற்கு தலைப்பு தேடி தவியாய் தவித்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு நள்ளிரவில் வந்தது திடீர் ஞானோதயம்.
தனது முதல் படமான தினாவில் இடம் பெற்ற அஜீத் பாடும் பாடல் ஒன்றின் முதல் வரிதான் நினைவுக்கு வந்ததாம் அப்போது. வத்திக்குச்சி பத்திக்காதுடா... என்பதில் பத்திக்காதுடாவை நீக்கிவிட்டு 'வத்திக்குச்சி' என்று வைத்துவிட்டார். என்னைக்கு முறைப்படி பற்ற வைக்கப் போறாரோ? |