|
தியாகராஜ பாகவதர் பயணம் செய்யுற ரயிலை பார்க்கவே ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டார்களாம். அந்தளவுக்கு தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் அவர். தங்க தட்டில் சாப்பாடு, தங்க பஸ்ப மேனி என்று பளபளப்பாக வாழ்ந்த மனிதர், ஜெயிலுக்கு போய் சின்னா பின்னமாகி செத்தார் என்பது வரலாறு. அவரது வாழ்க்கை, இப்போதும் வெட்டி பளபளப்பில் திளைக்கும் பல மேனா மினுக்கி ஹீரோக்களுக்கு பாடம்!
இறந்தும் வாழ்கிற மாதிரி, இவரது பெயரை காலமெல்லாம் எடுத்துரைக்க ஒரு சாலைக்கு பாகவதரின் பெயரை சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். எம்.கே.தியாகராஜ பாகவதர் அறக்கட்டளை தலைவர் தில்ரூபா சண்முகம் என்பவர் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இது பாகவதரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடப் போகிற வருடம் என்பதால்தான் இந்த கோரிக்கை.
அரசு நிறைவேற்றுமா? |