|
தேசிய விருது பெறுவதற்கு காரணமாக இருந்த அமீரையே, குபீர் ஆக்கி பேட்டியளித்தவர் ப்ரியாமணி. தனக்கான ரீ என்ட்ரிக்கு தானே நோ என்ட்ரி போர்டும் வைத்துக் கொள்கிற அளவுக்கு ஒரு பதிலை சொல்லி, கண்ணபிரான் பட வாய்ப்பையும் இழந்துவிட்டார். இந்த நிலையில் மீண்டும் தமிழில் ஒரு பக்கா படத்தில் நடித்துவிட வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது ப்ரியாமணிக்கு. ஆனால் காக்காய் கூட்டத்தில் கல்லெறிந்த மாதிரி யாரிடம் வாய்ப்பு கேட்டாலும் தலை தெறிக்க ஓடுகிறார்களாம்.
சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா என்று புரியாதவரா அவர்? தானே போனை போட்டு முக்கிய இயக்குனர்களை வலை போட்டு அமுக்குகிறாராம். லேட்டஸ்டாக அவன் இவன் படத்தின் இயக்குனருக்கே போன் போட்டு "உங்களை சந்திக்கணும். அப்பாயின்ட்மென்ட் வேணும்"னு கேட்டதாக தகவல். எதிர்முனை பதில் எப்படியோ? நம்பிக்கை குலையாமல் காத்திருக்கு பொண்ணு.
இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் மட்டும்தான் இப்போது தேர்வாகியிருக்கிறார். அந்த இன்னொரு சீட்டுக்குதான் இப்படி ஒரு கொக்கி. அந்த இன்னொன்னுலதான் ஜனனி நடிக்கிறாங்கன்னு சொல்லாமல் இருந்தா சரி... |