|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாமக தலைமையில் 3வது அணிக்கு தயார்: டாக்டர் ராமதாஸ் - நிரூபம ராவ், மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு - காமன்வெல்த் போட்டி நாட்களில் டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா புதிய எச்சரிக்கை - ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு -
தலைக்கு மேலே சாபம்?
மாமியார் வீட்டில் 'மாமா'

எனது சம்பளத்தை எனக்கே தெரியாமல் அமுக்கிக் கொண்டார் என்று மூக்கை சிந்தி Simranஅதை முனுசாமி மேலேயே துடைத்துவிட்டு போனார் மாளவிகா. இந்த முனுசாமி, மாளவிகாவின் முன்னாள் மேனேஜர். சாபம் தலைக்கு மேலேயே சுற்றும் போலிருக்கிறது. சில தினங்களுக்கு முன் விபச்சார கேசில் சிக்கிக் கொண்டார் இதே முனுசாமி.

சிம்ரன், சிந்துதுலானி என்று பிரபல நடிகைகளுக்கெல்லாம் மேனேஜராக இருந்து பிற்பாடு 'முன்னாள்' நிலைமைக்கு வந்தவர் இவர். தி.நகரில் இருக்கும் ஓட்டல் ஒன்றில் சின்னத்திரை நடிகை ஒருவரை வைத்துக் கொண்டு விபச்சாரத்திற்கு அழைத்ததாக கைது செய்தது போலீஸ்.

கோகிலா, மனைவி, காமெடி பஜார், அரசி ஆகிய டி.வி தொடர்களில் நடித்த ஜுலி என்ற 26 வயது பெண் இவரது கஸ்டடியில். இவருக்காக ஆள் பிடிக்கும் போதுதான், ஆள் தெரியாமல் போலீசையே பிடித்துக் கொண்டு வந்துவிட்டார் முனு. வந்தவர்கள் 25 ஆயிரத்தை இவர் கையில் திணிக்க, மகிழ்ச்சியோடு இவர் அதை பிரிக்க, லபக்கிக் கொண்டு போய்விட்டது போலீஸ். அவரது காரையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

உடனடியாக ஹோமுக்கு அனுப்பப்பட்டார் ஜூலி. முனுசாமி...? வேறெங்கே போவார், மாமியார் வீட்டுக்குதான்!

-மனஸ்வினி

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter