|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை:பழ.நெடுமாறன் - ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு - ஈரோடு அருகே 3 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை; தாயும் குதித்து தற்கொலை - பிரபாகரனின் தாயார் மலேசியா சென்றார்: சிவாஜிலிங்கம் - இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு 2010இன் சிறந்த அரசியல் தலைவர் விருது

சென்னையில் செட்டில் ஆகும் மாதவன்!

அசின் இந்திக்கு போய்விட்டார். இனிமேல் அவர் தமிழுக்கு வரமாட்டார் என்று ஏக்கத்தில் து£க்கம் தொலைக்கிற ரசிகர்கள், மாதவன் மாதிரி ஹீரோக்கள் இந்திக்கு போனால் மட்டும், "அத பற்றி எனக்கென்னா?" என்று அலட்சியம் காட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த செய்தி வீண். ஆனால், ஆங்காங்கே இருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத மாதவன் ரசிகர்களுக்கு இச்செய்தி தேன்! சென்னையில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் மாதவன்.

எம்மாம் பெரிசு? இது கல்யாண மண்டபமா, இல்லை, மன்னர்களின் மாளிகையா? என்று வியப்பை தருகிற நட்சத்திர வீடுகளில் நம்பர் ஒன் விஜயகுமார் மஞ்சுளா தம்பதிகளின் வீடுதான். இங்கே 100 அறைகளுக்கு குறையாமல் இருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக அமையப் போவது மாதவனின் வீடாகதான் இருக்கும். ஏனென்றால் ஈசிஆர் சாலையில் இவர் கட்டி வரும் வீட்டின் பரப்பளவு 12 கிரவுண்ட். அதில் எட்டு கிரவுண்ட் பக்கா வீடு என்கிறார்கள்.

மாதவனுக்கு பிராணிகள் என்றால் இஷ்டம். மற்ற ஹீரோக்கள் மாதிரி மாமிச பிரியரும் அல்ல. எனவே வீடு கொள்ளாமல் பிராணிகளை வளர்க்கும் திட்டம் வைத்திருக்கிறாராம். கஜினி கதையை சொல்லப் போகும்போது நாய் குட்டி போடுவதை ரசித்துக் கொண்டே கதை கேட்ட மாதவன், கதையை சொல்ல வந்த ஏ.ஆர்.முருகதாசுக்கு எரிச்சலை மூட்ட, விருட்டென்று எழுந்து போனார் டைரக்டர். இந்தியாவையே கலக்கிய ஒரு வெற்றிப்படம் கைவிட்டு போனது ஐந்தறிவு ஜீவனால். இப்போது வீடு கொள்ளாமல் பிராணிகள் என்றால்...?

நல்லா கதை கேட்டு... நல்லா நடிச்சு... வெளங்கிரும் போங்க!

-பரஸ்பர பரமன்

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter