ஆடிய காலும், பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பார்கள். அதை மறுபடியும் உண்மையாக்கப் போகிறார் சோனியா அகர்வால். கோடம்பாக்கத்தில் ஒரு காலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை உருவாக்கி, இளைஞர்களை ஜொள் மழையில் நனைய வைத்தவர் சோனியா அகர்வால். 7 ஜி ரெயின்போ காலனியில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கும், அப்படத்தின் இயக்குனர் செல்வராகவனுக்கும் காதல் அரும்பி, கல்யாணத்தில் முடிந்தது.
அதன்பின் குடும்ப வாழ்வில் தன்னை அர்பணித்துக் கொண்ட சோனியாவுக்கு, அதிலும் விரக்தியே ஏற்பட்டது போலும். மீண்டும் சினிமாவில் நடிக்கவிருப்பதாக செய்திகளை கசிய விட்டார். இதை கேள்விப்பட்ட பல இயக்குனர்கள் சோனியாவை தொடர்பு கொண்டார்கள். ஆனால், மனைவி நடிப்பதில் விருப்பம் இல்லாத செல்வராகவன் தனது படங்களில் உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார் சோனியாவை.
அதிலும் நிலைகொள்ளாத சோனியா, இப்போது சின்னத்திரையில் தலைகாட்டுவது என்று முடிவெடுத்துவிட்டாராம். செய்தியை கேள்விப்பட்டதில் இருந்தே, பிரபல தொலைக்காட்சிகள் இரண்டு, இவரை துளைத்தெடுக்கிறார்களாம். சோனியா யார் பக்கம்? இதுதான் இப்போதைய பெரும் கேள்வி...
-டப்பிங் ராமசாமி |