சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
வேலைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன், பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் சிவகார்த்திகேயன்.
இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். இப்படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக தான் உருவாக இருக்கிறது.
இப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
24 ஏ எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.