மாதத்தில் இரண்டு பவுர்ணமி வந்தது இந்த வருடத்தில்தான். இந்த

அதிசயத்தை கொஞ்சம் பழசாக்கினார் ரீமாசென். ஒரே வாரத்தில் பலமுறை சந்திக்க நேர்ந்தது இவரை! ஆயிரத்தில் ஒருவன் பட பிரமோஷனுக்காக சென்னை வந்தவர், ஆடியோ ரிலீஸ், ப்ரிவியூ ஷோ, பிரஸ்மீட், சேனல் மீட் என்று மாற்றி மாற்றி தர்ம தரிசனம் தந்தார். ஒவ்வொரு முறையும் அவரது காஸ்ட்யூமை கவனித்தோம். ரொம்ப சிம்ப்பிள். அதிகம் உறுத்தாத மேலாடை! (ஆனா நம்ம கண்ணை உறுத்துதே) மிடி அல்லது மெல்லிய துணியால் உருவாக்கப்பட்ட பேண்ட்! கரண்ட் கட் ஆகி ஏ.சி ஆஃப் ஆனாலும், அவரை பொறுத்தவரை காற்று போகாமல் கஷ்டப்படவே மாட்டார் போலிருந்தது. இந்த தாராளம் இருக்கிற வரைக்கும் ரீமாசென்னின் கலை சேவைக்கு ஓய்வே கொடுக்க மாட்டார்கள் ரசிகர்கள். (ஹி...ஹி...நம்மளும்தான்)