|

| To Karunas, |
|
|
விட்டால் நடிகைங்க முகத்திலே முட்டை வீசுவீங்க போலிருக்கே அண்ணாச்சி...? |
|
|
| ஆடி பாடி உழைச்சாலும், ஆடி மாச சென்ட்டிமென்ட் ஆட்டிப்படைக்குது தமிழ்சினிமாவை. அதனால் கைவசம் இருக்கிற படத்தையெல்லாம் முடிச்சு இந்த மாசமே வெளியிட முடிவு செஞ்சிருக்காங்க நிறைய பேரு. சின்ன படம், பெரிய படம் பாரபட்சம் இல்லாமல் இந்த மாசம் இறுதிக்குள்ளே வரப் போற படங்களோட எண்ணிக்கை மட்டும் பத்தை தாண்டுமாம். சாமீய், தௌசண்ட் படமெல்லாம் ஆடி முடிஞ்ச பிறகுதானாம் |
| சண்டக்கோழிக்கு திடீர் குழப்பம். என்ன மாதிரி ரூட்டை பிடிப்பது என்பதிலேதான்! சரியான ஒரு முடிவெடுக்கறதுக்குள்ளே விளையாட்டு படத்தை கைவிட்டுருச்சு பட நிறுவனம். ஆனால், ரீமா நடிகைக்கும், ஸ்ரேய நடிகைக்கும் இருபத்தைந்து லட்சத்தை அட்வான்சா கொடுத்திட்டாங்களாம். பணத்தையும் திரும்பி கேட்க முடியாம தவிக்குது கம்பெனி. கால்ஷீட்டையே கை மாத்தி விடுவாங்க போலிருக்கு. |
|
மாடுகளை உழவுக்கு பயன்படுத்தும் போது கம்பு மற்றும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன் படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள். அந்நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நடிகை அமலா
|
|
|
கலைஞருக்கு செய்யும் கைமாறு

உள்ளாட்சி மன்றங்கள், ஊராட்சி மன்றங்கள், பேரூராட்சி மன்றங்கள் ஆகியவற்றிற்கு போக வேண்டிய கேளிக்கை வரி, தமிழக அரசு திரையுலகத்திற்கு அளித்துவரும் சலுகையால் தடுக்கப்படுவதாகவும், இதனால் உள்ளூர் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அரசுக்கு தினந்தோறும் கடிதங்கள். இதனால் வரிவிலக்கு தருவதை மறு பரிசீலனை செய்ய முடிவெடுத்திருந்தார் முதல்வர்.
ஆனால், திரையுலகத்தை சேர்ந்த சங்கங்களும், தயாரிப்பாளர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஏற்படும் ஐம்பது கோடி ரூபாய் இழப்பை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று கூறி திரையுலகத்தின் வயிற்றில் மறுபடியும் பால் வார்த்திருக்கிறார் முதல்வர் கலைஞர். இதையடுத்து மீண்டும் அவரது வரிவிலக்கு கொள்கை பலரால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும் அபாயம் இருக்கிறது. இது போன்ற தலைப்புகளுக்கு ஏன் நமது வரிப்பணத்தை கொடுக்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பக் கூடும்.
இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நமது வேண்டுகோள் இதுதான். எதிர்ப்புகளை மீறி வரிவிலக்கு அளித்தவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தாத வகையில் நல்ல தமிழ் பெயராக படங்களுக்கு சூட்டுங்கள். அதுதான் கலைஞருக்கு நாம் செய்யும் கைமாறு!
|
|
|